Thursday 14 February 2013

ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !

                                              இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற மிக மிக முக்கியமான நபர்களை பாதுகாப்புடன் ஏற்றிச் செல்வதற்கான ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ 360 கோடி லஞ்சம் கைமாறியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இத்தாலிய நாளிதழ் லா ரிபப்ளிகாவில் வெளியானது.  ‘இந்தியாவுடனான ஹெலிகாப்டர் டீலில் ரூ 55 கோடி கறுப்புப் பணம் கைமாறியிருக்கிறது’ என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ‘ இதைக் குறித்து விசாரணை நடத்தியதாகவும் எந்த தவறும் நடக்கவில்லை’ எனவும் இந்திய அரசு அப்போது சொல்லி விட்டது. 

                                                               ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெற்றிருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனமும், தான் எந்த முறைகேடிலும் ஈடுபடவில்லை என்று சாதித்தது. இப்போது ரூ 360 கோடி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைவர் கியூசெப் ஒர்சி இத்தாலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனமான பின்மெக்கானிகா இத்தாலியின் இரண்டாவது பெரிய தொழில் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இத்தாலி அரசு 30 சதவீதம் பங்குகளை வைத்திருக்கிறது.
இதற்கு மேலும் இந்த ஊழலை மறைக்க முடியாமல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதை நிறுத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய அரசின்  பாதுகாப்புத் துறை. இராணுவ பயன்பாட்டுக்காக ரூ 8,000 கோடி மதிப்பில் 197 ஹெலிகாப்டர்கள் வாங்கும் இன்னொரு திட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறது.

                              பிரதமரும் ஜனாதிபதியும் மிக மிக முக்கியமான நபர்களும் போவதற்கு லேட்டஸ்ட் ஹெலிகாப்டர் தேவை என்ற தூரப் பார்வையுடன் அவர்களை ‘ஏற்றிச் செல்வதற்கான ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட எம்.ஐ. 28 ரக ஹெலிகாப்டர்கள் பழசாகி விட்டதால், புதிதாக வாங்க வேண்டும்’ என்று அரசு 1999ம் ஆண்டு முடிவு செய்தது. இந்த ‘முக்கிய’ தேவைக்காக 8 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த டெண்டரில் ‘ஹெலிகாப்டர்கள் 6,000 மீட்டர் உயரம் வரை பறக்கக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது.

                                       இப்போது வாங்கப்பட்டிருக்கும் AW-101 அப்போது EH-101 என்று அழைக்கப்பட்டது.  அந்த ஹெலிகாப்டர் 6,000 மீட்டர் உயரத்தில் பறக்கக் முடியாது என்பதால் டெண்டரில் கலந்து கொள்ள முடியவில்லை.
‘நம் நாட்டின் மிக மிக முக்கிய நபர்கள் 6,000 மீட்டர் உயர இடங்களுக்கு அடிக்கடி போவதில்லை என்பதால் உயரத்தை 4,500 மீட்டராக குறைத்துக் கொள்ளலாம்’ என்றும் ‘ஹெலிகாப்டரின் உள் பகுதியில் 1.8 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்’ என்றும், ‘மூன்று எஞ்சின்கள் உள்ள ஹெலிகாப்டர்களையும் சோதனைக்கு சேர்த்துக் கொள்ளலாம்’ என்றும் வரையறைகள் திருத்தப்பட்டு 2006ம் ஆண்டு 12 ஹெலிகாப்டர்களுக்கான டெண்டர் விடப்பட்டது.

                                                  மூன்று எஞ்சின் கொண்ட AW-101 ஹெலிகாப்டர்களை சேர்த்துக் கொள்ளும்படியாக விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அகஸ்டா வெஸ்ட்லேண்டு, ரஷ்யாவின் எம்.ஐ.17, அமெரிக்காவின் சிகோர்ஸ்கி எஸ்-92 ஆகிய நிறுவனங்களுடன் டெண்டரில் கலந்து கொண்டது. ரஷ்ய நிறுவனம் வங்கி வைப்புத் தொகை செலுத்த முடியாததால் தொழில்நுட்ப பரிசீலனை கட்டத்துக்கு முன்னேற முடியவில்லை. 2008ம் ஆண்டு அமெரிக்க ஹெலிகாப்டரும் இத்தாலிய ஹெலிகாப்டரும் பரிசீலிக்கப்பட்டு அகஸ்டா வெஸ்ட்லேண்டின் ஹெலிகாப்டரை வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

                                 அதன்படி 2010ம் ஆண்டு அகஸ்டாவெஸ்ட்லேண்டுக்கு ரூ 3,600 கோடி செலவில் 12 AW-101 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஆர்டரை பாதுகாப்புத் துறை கொடுத்தது. ‘இந்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாக முடித்துக் கொள்வதற்காக ஒப்பந்தத் தொகையில் சுமார் 10 சதவீதம் (ரூ 370 கோடி) லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ 200 கோடி லண்டனில் வசிக்கும் கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர் மூலம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்’ இத்தாலிய புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

                                         ’2004 முதல் 2007 வரை இந்திய விமானப்படை தலைமை தளபதியாக இருந்த  எஸ்.பி. தியாகி அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகளை திருத்தினார்’ என்று இத்தாலிய புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ‘தியாகியின் உறவினர்களான ஜூலி தியாகி, தோக்சா தியாகி, சந்தீப் தியாகி என்பவர்கள் மூலமாக அவரது அதிகார பூர்வ கடமைகளுக்கு மாறாக செயல்படுவதற்காக பணம் கொடுக்கப்பட்டது’ என்று இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏ கே ஆன்டனி

                                                 2005ம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் ‘திருவாளர் தூய்மையாளர்’ என்று அழைக்கப்படும் கேரளாவின் ஏ கே ஆன்டனி. அவரது ‘தூய்மையும் நேர்மையும்’ அழுகிப் போயிருக்கும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு திரை போட மட்டுமே உதவியிருக்கின்றன.
“இந்த ஒப்பந்தம் தொடர்பாக புகார் எழுந்தபோது, இது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்குமாறு இத்தாலி அரசை கேட்டுக் கொண்டோம். ஆனால், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் ஏ கே ஆன்டனி. “சி.பி.ஐ. விசாரணையில் தவறு செய்தவர்கள் என்று தெரிய வந்தால் யாராயிருந்தாலும் விட மாட்டோம்” என்றும் ஆன்டனி வீரம் காட்டியிருக்கிறார்.

                                         ’2G அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ.யின் வழக்கறிஞரே குற்றம் சாட்டப்பட்ட கார்ப்பரேட் தலைகளுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் செயல்பட்டார்’ என்ற தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் சி.பி.ஐ. விசாரணையில் என்ன தெரிய வந்து விடும் என்ற தைரியம் இருக்கலாம். அல்லது போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இத்தாலிய குற்றவாளிகளை தப்பிக்க விட்ட அவரது இந்திய எஜமானர்களிடம் முன் அனுமதி வாங்கியிருந்திருக்கலாம். இந்தியா 2006க்கும் 2010க்கும் இடையே உலக ஆயுத இறக்குமதியில் ஆண்டு தோறும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.  அடுத்த 10 ஆண்டுகளில் இராணுவத்துக்காக சுமார் ரூ 3.4 லட்சம் கோடி செலவு செய்யப் போவதாக அரசு திட்டமிட்டுள்ளதால் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

                                                       நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை வைத்து மஞ்சள் குளிக்கும் மோசடி பேர்வழிகள்தான் அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத் தலைவர்கள் என்று சீருடை அணிந்து வலம் வருகின்றனர். ஆயுதங்களையும் கருவிகளையும் விற்று நம் நாட்டின் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு கணிசமான அளவு லஞ்சம் கொடுத்து இவர்களை குளிர்விக்கின்றனர் ஆயுதங்கள் விற்கும் பன்னாட்டு முதலாளிகள்.

                        பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?



நன்றி : வினவு இணையதளம்

Wednesday 13 February 2013

விஸ்வருபம் : மீண்டும் தனிமைப்படும் இஸ்லாமியர்கள்

   25 இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமியர்களை வேண்டுமானால் ஒன்றுபடுத்தி இருக்கலாம்..ஆனால் இவர்களின் திரைப்படத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டமும், அதற்கு பின்னால் நடந்த அரசியல் சதி வலைகளும், இஸ்லாமிய சமுதாயத்தை, சமுகத்தில் மற்ற மக்களிடம் இருந்து தனிப்பட்டு நிற்க வைத்துள்ளதாகவே தோன்றுகிறது..
    ஒரு திரைப்படத்தால் ஒரு சமுதாயத்தின் பார்வை மாறிவிடும் என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், இவர்களின் போராட்டம் வாலை விட்டு தும்பை பிடித்த கதையாக உள்ளது..சமுகத்தில் மக்கள் தங்களை, தனி குழுவாக பார்பதை நிறுத்த இவர்கள் என்ன செய்தார்கள்.மற்ற மதங்களில் உள்ள மக்களிடம் எவ்வகையான தொடர்பை இவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதே இப்பிரச்சனையின் சாராம்சம்..
   இவர்களின் இந்த போராட்டத்திற்கும், மற்ற மத வெறி அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது..மத ரீதியிலான எந்த போராட்டமும், எதிர் தரப்பை இவர்களிடம் இருந்து விலகி செல்லவே வழி வகுக்கும் என்பதை இவர்களே இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ்க்கு  தெளிவாக எடுத்து சொன்னவர்கள் ..இதே தவறை ஏன்  மீண்டும் இவர்களே செய்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விகுறி..
      
விஸ்வரூபம் மாதிரியான குப்பை மசாலாக்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பொதுப்புத்தியில ் நிறுவுவதற்கு உதவுகிறது  என்பதே படம் வெளியாவதற்கு முன்பு இஸ்லாமிய இயக்கங்களின் குற்றசாட்டு..இதை திரைப்படங்கள் மட்டுமே செய்யவில்லை..பெரும்பாலான காட்சி, செய்தி ஊடகங்கள் இதைதான் செய்து வருகின்றன..அப்சல் குரு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்..கைது செய்து காவல்துறை இவரின் படத்தை வெளியிட்ட உடனேயே, இவரை திவிரவாதியாக அடையாளமிட்டு செய்தி வெளியிட்ட இவைகள்..இதுவே உச்ச நீதிமன்ற இறுமாப்பு நீதிபதிகள், இப்படி ஒரு கொடூர மரண தண்டனை கொடுக்க வழிவகை செய்து உள்ளன ..இதற்கு என்ன செய்ய போகின்றன இந்த அமைப்புகள்.
 
தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக சில அரசியல் வியாதிகளின் சூழ்ச்சியில், ஒட்டுமுத்த இஸ்லாமிய மக்களை தனிமை படிதியுள்ளன இந்த அமைப்புகள்

Thursday 23 August 2012

coalgate : பல் இளிக்கும் இந்தியா

நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கை மீது விவாதம் நடத்த நாங்கள் தயார். பாஜக கோருவது போல பிரதமர் ராஜினாமா செய்ய மாட்டார்” என்கிறார் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால். அதுதானே சரி என்கிறது பாஜக வின் கூட்டணிக்கட்சியான ஐக்கிய ஜனதாதளம். நம்ம நல்ல நேரம் நல்ல பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார் என்கிறார்கள் காங்கிரசு அமைச்சர்கள். சிஏஜி போட்ட கணக்கு தப்பு என்கிறார் அவர்களது வரைவறிக்கையை திருத்திய யோக்கியர் மன்மோகன் சிங். இதனால் புதன்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
2004 ஜூனில் இனிமேல் ஏலம் விட்டுதான் நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தாலும் காங்கிரசு அல்லாத அரசுகள் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் அதனை நடைமுறைப்படுத்த தவறியதால்தான் இந்த 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்கிறார்கள் காங்கிரசார். எங்கே இதில் லாபமடைந்த பாஜக தலைவர் நிதின் கட்கரியின் மகனது பெயரை வெளியிட்டு விடுவார்களோ எனப் பயந்து நாடாளுமன்ற விவாதத்தை புறக்கணிக்கிறது பாஜக. “எங்கள் முதலமைச்சர்கள் நிலக்கரி ஏலத்தை எதிர்த்தாலும் முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான்” என்று முகத்தில் வடியும் எச்சிலை துடைக்கிறார் பா.ஜ.கவின் அருண் ஜேட்லி
சிஏஜி மே மாதம் வெளியிட்ட வரைவறிக்கையில் குறிப்பிட்ட இழப்பு 10.7 லட்சம் கோடி ரூபாய் 1.86 லட்சம் கோடியாக எப்படி மாறியது என்பதை சிஏஜி விளக்கவில்லை. விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார்தான் 2006 இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக இருந்து 15 நிலக்கரி வயல்களை தரகு முதலாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தவர். இவரை சிபிஐ விசாரித்தால் யார் குற்றவாளி, யார் நிரபராதி என்று குழப்பம் வரும்.
2006 லிருந்து 2009 வரை ஒதுக்கப்பட்ட 64 நிலக்கரி வயல்களுக்காக பெறப்பட்ட 1442 விண்ணப்பங்களில் பெரும்பான்மை போலியான நிறுவனங்கள்தான் என்கிறது சிஏஜி. 2004 இல் டன் ஒன்றுக்கு ரூ.2000 ஆக இருந்த நிலக்கரியின் சர்வதேச சந்தை மதிப்பு இன்று ரூ.14,000. நம்மிடமுள்ள 1700 கோடி டன் நிலக்கரியை நூறுக்கும், ஐம்பதிற்கும் தாரை வார்த்துள்ளார்கள்.
இதிலெல்லாம் வியாபாரத்திற்கு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் அப்போது கருதவில்லை என்கிறது காங்கிரசு. வயல்களை பெறும் நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரத்தை, சிமெண்டை அரசுக்கு குறைந்த விலையில் தர வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் ஏலத்தில் எடுத்த பல கம்பெனிகள் உற்பத்தியிலே ஈடுபடாதவை. 2ஜி ஊழலில் போலவே அரசிடம் குறைந்த விலைக்கு வயல்களை வாங்கி சர்வதேச சந்தையில் விலை உயர்வதற்கேற்ப விற்க தயாராக இருந்தவை. அரசுக்கு யூனிட் மின்சாரம் 1 ரூபாய்க்கு தருவதாக ஒத்துக்கொண்டு இலவசமாக நிலக்கரி வயல்களைப் பெற்ற அம்பானி, டாடா, ஜிண்டால், பிர்லா, எஸ்ஸார் குழுமம் போன்றவர்கள் 18 ரூபாய்க்கு குறைவாக யூனிட் மின்சாரத்தை தரவில்லை. இதெல்லாம் 1.86 லட்சம் கோடியில் கணக்கிடப்படாத தொகை என்பதையும் மறந்துவிடக் கூடாது. சிமெண்ட் விலை குறைந்திருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த லட்சணத்தில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி தரத் தவறினால் அபராதம் வேறு செலுத்த வேண்டும்.
தனியார்மயம் என்ற தனிப்பெரும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என மக்கள் சொத்தான நிலக்கரி வயல்களைக் கொள்ளையடிக்கிறார்கள் தரகு முதலாளிகள். அவர்களுக்கு இயற்கை வளத்தை பங்குவைத்த காங்கிரசும் பாஜக வும் பாராளுமன்றத்தில் சண்டை என சும்மா பம்மாத்து பண்ணுகிறார்கள். திருடனே திருடனைப் பிடி என்று கூச்சலிடுவது திருட்டைக் காப்பாற்றவே அன்றி திருட்டுப் பொருளை மீட்க அல்ல.

Thursday 16 August 2012

பிளவு... பிளவு.. பற்றி எரியும் இந்தியா

பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் தொடர் வண்டி நிலையங்களில் எங்கும் ஒரே கூட்டம்..ராமர் கோவில் கட்ட மூட்டை முடிச்சிகளுடன்  கிளம்பி விட்டர்கள என தோன்றியது..விசாரித்து பார்த்தல் அது சொந்த ஊருக்கு செல்லும் நம் மக்களளின் கூட்டம்.. என்னடா இது, எதாவது பண்டிகையா என விசாரித்து பார்த்தல், அதுவும் இல்லையாம்... பிறகு ஏன், எல்லாரும் இப்படி அடித்து பிடித்து ஊருக்கு போறாங்கன்னு கேட்டா சொன்னங்க.... இங்க எங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு... என்ன கொடும சார் இது.. இவ்வளவு பெரிய ஊர்ல, கோடி மக்கள் கூடி வாழும் இடத்தில , உங்களுக்கு பாதுகாப்பு எதுக்குன்னு கேட்டா, எங்கல அடித்து போட்டா கூட கேட்க ஆளு இல்லை சொல்லறான்..
       அது சரி, இந்த நாட்டில் எவன்தான் கேப்பான்.. பாங்க்ல கொள்ள அடிச்சான்னு  5  பேரை போலிசே கொன்னு போட்டிச்சி, எவன் கேட்டான்... அப்பிடிதான் இருக்கும் இந்தியா மாதிரி நாடு.. அட அத விடுங்க, உள் குத்து பிரசனையில போலீஸ்கரன் ஒருவன் துப்பாக்கியில் சுடுறான்,... காக்கி சட்ட போட்டா ரவுடி..அதுவும் நம்மூர்ல..அதையும் எவனும் கேட்கல..உங்கள அடிச்சா மட்டும் யாரு கேப்பா... அப்படியே வாழ பழகிகொள்ளவேண்டியதுதான்...அப்படிதான் இந்த நாட்ல வாழ முடியும் பாஸ்...
          அட, நீங்களும் இந்தியர்கள்தான ?? ஒ.. உங்கள நிறைய பேர் சீனாகாரன்னு நினைசிட்டங்க போல..ஒரு வேல சீனா மேல நம்ம ஆட்களுக்கு ஒரு வெறி கிளம்பிடிசோ??? இருக்காதே.....இவனுகதன் மானம், சூடு, சொரண கெட்ட பயலுவ ஆச்சே!!!! ஈழத்தில் கொடூர கொலை நடந்த பொது, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கிரிக்கெட் மேட்ச் பாத்த நாடு அல்லவே இது... பிற எப்படி இவனுக வெறி பிடிச்சி கிளம்புவாணுக...நடக்காதே!!!!
      அட சங்கதி அப்படியா...ஓகோ... அங்கே கலவரம், அதனால இங்க விரட்டி அடிகிறாங்கள...அட பாவிகளா... இங்க இருக்கிரவனவது நல்ல இருக்கட்டும்..முடியாதா??? ஏன் ?? என்னது இது மதப்பிரச்சனையா????  அப்படி போடுங்கடா.... அதான, ஒரு நல்லதுக்கு ஒன்னு சேர மாட்டானுக... பாக்காத கடவுளுக்கு எதாவது பிரச்சன ன்னு சொன்ன, வீணா போன ஒரு வெட்டி கூட்டம்,  உடனே ஆரம்பிச்சி, அதுல ஒரு லாபம் தேடுவாங்க..

Wednesday 4 April 2012

கூடங்குளம் போராட்டம் ...


          வல்லரசுக்கனவுகளில் திளைக்கும் அதிகாரிகள்,  அரசியல்வாதிகள், அவர்களது கைக்கூலிகள் அனைவருக்குமே கூடங்குள் இயக்கம் பேரதிர்ச்சியாக வந்தது. பெருமளவில் மக்கள் அணிதிரள்கிறார்கள்.  பெரிய அள்வில் வன்முறை இல்லை, ஆனால் இவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று மிரண்டு பல இரவுகள் தங்கள் உறக்கத்தையே பலர் இழந்திருக்கக்கூடும். அப்படி மிரளவைத்தது ஒரு சாதனைதான்.
நிபுணர் குழுக்களை அனுப்பி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு வருந்தி வருந்தி அழைத்தது இவையெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு, அனைத்துவித அரசு எதிர்ப்பாளர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியளித்ததும் உண்மையே.
                         ஏதோ சில வரையறைகளுக்குள்ளான  போராட்டமே என்று அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்திருக்க்லாம். ஆனால் வெளியுலகிற்கு அதெல்லாம் தெரியாத நிலையில், சூசகமாகவேனும் தெரிவிக்கப்படாத நிலையில், போராட்டம் முடங்கிப்போயிருப்பது ஒரு தோல்வியாகவே பார்க்கப்படும். அத்த்கையதொரு புரிதல் எதிர்கால மக்கள் போராட்டங்களுக்கு பின்னடைவாகக் கூட அமையலாம். சில மாதங்கள் அனைத்திந்தியாவையும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த ஒரு பெரும் எழுச்சிக்கு இப்படி ஒரு முடிவென்பது சோகமே.
                      போராட்டங்கள் நிகழ மக்களுக்கு கம்னியுச சிந்தனைகள் தேவை. அல்லது அந்த சிந்தனை உள்ளவர்கள் கட்டமைப்பு ரீதியாக, பல கட்டங்களில் மக்களுடன் நின்று , மக்களை திரட்ட வேண்டும்..மக்களுக்கு போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைக்க வேண்டும். அதாவது மக்களின் உணர்ச்சி நிலையை மட்டும் நம்பி களத்தில் இறங்காமல், போராட்டத்தின் அடிப்படை மற்றும் போராட்ட அவசியம் , போராட்டம் முறை , பின்விளைவுகள் போன்றவை கணக்கில் கொள்ள படவேண்டும்..
   மேலும் இந்த பிரச்சனையில் ஒட்டுமொத்த இந்தியாவும், இந்த போராட்த்திற்கு எதிர்ப்பு போல் ஒரு மாயை(உண்மையாகவும் இருக்கலாம், இந்த ஒட்டுண்ணி இந்திய  மக்கள் சிந்தனையை, முதலளிதுவதுக்கு அடகு வைத்து விட்டார்கள் அல்லவே, சில பேர் தெரிந்து, பெரும்பாலோனோர் தெரியாமல்)... மேலும் ஒரு போராட்டம் எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றால், அதற்க்கு ஒரு அமைப்பு தேவை.. பெரிய கட்சிகள் எதுவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை.. இவர்கள் ஆதரவு என்பது, இவர்களது அமைப்பு ரீதியானது மற்றும் அரசியல் ரீதியானது,, ஏனன்றால் அரசாங்கம் அல்லது அரசியலமைப்பு என்பது பிரதிநித்துவம் சார்ந்தது.. இவர்கள் அதரவு இல்லாமல் இதை பெரிதாக எடுத்து செல்ல முடியவில்லை,.. ஏன் என்றால் இது ஒரு சிறிய பகுதியின் போராட்டம் என்றுதான் பிறரால் பார்க்கப்பட்டது.. இதுதான் போராட்டத்தின் தோல்விக்கு மிக பெரிய காரணம்.. மேலும் அரசின் கையாலகாத (அதிகாரத்தை பயன்படுத்தி), பலவிதமான குற்ற சாட்டுகள்..கிறித்துவ போராட்டம் , வெளிநாட்டு சதி,..இந்து முன்னணி குண்டர்கள் அடாவடி, மேலும் பல பல...

நமக்கு தேவை... மக்களின் அடிப்படை புரிந்துணர்வு.. தங்கள் அடிப்படை உரிமை பற்றிய அறிவு.. மறக்க வேண்டாம் தோழர்களே இந்திய சுதந்திர போராட்டம் ஒரு சில ஆண்டுகளில் உருவானது அல்ல,200 ௦௦ வருட மக்கள் திரட்டல் 

Monday 26 March 2012

இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை..ஞானி பக்கங்கள்

…முதல் பக்கம்...இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.

பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ :

“உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவை சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். ந்மக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குவிக்கை நினைவு கூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.

இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதியுங்கள். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்குங்கள். ஓரிரு துப்பாக்க்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாதீர்கள். மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், முதலாளிகளின் அன்புக்கும் உரியவராவீர்கள். தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கனவே அந்த இடம் உங்கள் அரசியல் பங்காளி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். இப்போதும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்களின் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். முதல் வழி உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.”

ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத்தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கனக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜ்பக்‌ஷே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது.போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்லமுடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதை அரசுகள்தான் செய்திருக்குமே தவிர மக்கள் அல்ல.

சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளி கூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஒரு அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.கவும் அ.தி.மு.கவும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களை கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளை சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக் கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளன.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப்பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தை சூழ்ந்துகொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ந் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.

அவர்கள் கேட்டது என்ன ?

உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசி வரை மக்களின் விஞ்ஞானிகளை சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.

விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசி வரை வெளியிடவே இல்லை.

மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.

ஆனால் ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனை நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லபப்டவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ கடைசியில் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர் சீனிவாசன் அதில் இடம் பெறுவதை போராட்டக்குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தன்னை சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.

நடுவில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக் கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெவின் சொந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசு சொத்துக் குவிப்பு, இன்னும் வெளிவராத இதர ஊழல் வழக்குகளை சி.பி.ஐயைக் காட்டி பக்குவமாக மிரட்டல் செய்திகள் அனுப்புவதால், அதன் சொல்படி கேட்கிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.

அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்த மேதாவிகள் பட்டியலும் இன்னொரு பக்கம் நரி கையில் நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு நாலு ஆடு கேட்கும் நிலையிலான போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அய்யோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.

உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல ஜெ, மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தி துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடந்தால்தான் அறிவு வரும் என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்தமுடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்கவேண்டாமென்று மட்டுமே, இல்லாத கடவுளை நான் பிரார்த்திக்க வேண்டும்.

இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்ல வேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்கவேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.

உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தன்னை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக்கூடாது. ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக்க்கூடாது ? ஏன் அவர்களிடம் தனக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக்கூடாது ? ஓட்டு கேட்க மக்களை சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் டெல்ல்க்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறை கூட போய் பார்க்க முன்வரவில்லை ?

இதுவே கூடங்குளம் மக்கள் ஜார்கண்ட் மாவோயிஸ்ட்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல் துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே ? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னை ஏ.சி.அறையிருந்தல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள் ? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா ? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை பேச்சு வார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?

காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தானும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை ? அமைதியாக வாழவும் அமைதியாக போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கி தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம் ? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.

அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன் ஜெ நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் ஓட்டு 49ஓதான். இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளி கூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்த கரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்
நன்றி www.gnani.net

Tuesday 6 March 2012

காங்கிரசை உட்கார வைத்த உத்தரப்பிரதேசம்

எங்கள் வழிகாட்டி, எங்கள் எதிர்காலம் ,எங்கள் குலவிளக்கு என்றெல்லாம் எடுத்து இயம்பப்பட்ட, ராஜா வீட்டு கன்னுக்குட்டி, இன்று என்ன செய்வது என்று தெரியாமல், வெற்றி பெற்ற முலாயம் ரௌடி கும்பலுக்கு வாழ்த்து தெரிவிதுள்ளார் ராகுல் "கெந்தி"(அட இதுதான் உண்மையான பெயர்)..
      சோனியாவும் தன் குலவிளக்கை எப்படியாவது அரியணையில் ஏற்றி விடுவது என குட்டிகரணம் அடித்து பார்க்கிறார். ஆனால் இந்த அரசியல் கத்துக்குட்டி, என்னவோ பெரிய தலைவர் ரேஞ்சுக்கு பில்ட் அப் எல்லாம் குடுத்து பார்த்தும், ஒரு மண்ணும் தேரல.என்ன செய்வது, இவன் அப்பன் வரை , காந்தி , நேரு ன்னு ஓட்ட வாங்கினாணுக..அந்த கதையெல்லாம் இப்போ பருப்பு வேகல..சரி, எம் ஜி ஆர் மாதிரி கொஞ்சம் சீன் ஒட்டி பார்த்தும் ஒரு மன்னாங்கட்டியும் நடக்கல..
  அட இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா என காங்கிரஸ் ஜால்ரா கோஷ்டி, ஜின் சக் அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு சிலர் சில படி மேலே போய், காங்கிரஸ்க்கு இவ்வளவு கெடச்சதே எங்கள் குலவிலக்கால் தான், என தங்களையே செருப்பாலும், விளக்குமாரினாலும் அடித்து கொள்கின்றனர்...என்ன செய்வது!!!!
   நம்மால்தான் முடியல, நம்ம அக்கவையாவது பார்த்து மக்கள் ஏமாறுவார்கள என முயற்சி செய்து, இறுதில் அவரது கணவரையும் களத்தில் இறக்கி பார்த்தான் இந்த மாங்கா...அதுவும் நடக்கல..

காமராஜர் செய்தது மக்கள் தொண்டு. அதனால் வந்தார் அரசியலுக்கு.. நீ சும்மா ஏ சி ரூம்ல இருந்துட்டு, சில நேரங்களில் வந்து டகால்டி பண்ணிட்டு, நான்தான் அடுத்த பிரதமர் ன்னு சொன்ன கேக்ரவன்னெல்லாம் என்ன கேன பயலா???