Wednesday 13 February 2013

விஸ்வருபம் : மீண்டும் தனிமைப்படும் இஸ்லாமியர்கள்

   25 இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமியர்களை வேண்டுமானால் ஒன்றுபடுத்தி இருக்கலாம்..ஆனால் இவர்களின் திரைப்படத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டமும், அதற்கு பின்னால் நடந்த அரசியல் சதி வலைகளும், இஸ்லாமிய சமுதாயத்தை, சமுகத்தில் மற்ற மக்களிடம் இருந்து தனிப்பட்டு நிற்க வைத்துள்ளதாகவே தோன்றுகிறது..
    ஒரு திரைப்படத்தால் ஒரு சமுதாயத்தின் பார்வை மாறிவிடும் என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், இவர்களின் போராட்டம் வாலை விட்டு தும்பை பிடித்த கதையாக உள்ளது..சமுகத்தில் மக்கள் தங்களை, தனி குழுவாக பார்பதை நிறுத்த இவர்கள் என்ன செய்தார்கள்.மற்ற மதங்களில் உள்ள மக்களிடம் எவ்வகையான தொடர்பை இவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதே இப்பிரச்சனையின் சாராம்சம்..
   இவர்களின் இந்த போராட்டத்திற்கும், மற்ற மத வெறி அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது..மத ரீதியிலான எந்த போராட்டமும், எதிர் தரப்பை இவர்களிடம் இருந்து விலகி செல்லவே வழி வகுக்கும் என்பதை இவர்களே இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ்க்கு  தெளிவாக எடுத்து சொன்னவர்கள் ..இதே தவறை ஏன்  மீண்டும் இவர்களே செய்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விகுறி..
      
விஸ்வரூபம் மாதிரியான குப்பை மசாலாக்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பொதுப்புத்தியில ் நிறுவுவதற்கு உதவுகிறது  என்பதே படம் வெளியாவதற்கு முன்பு இஸ்லாமிய இயக்கங்களின் குற்றசாட்டு..இதை திரைப்படங்கள் மட்டுமே செய்யவில்லை..பெரும்பாலான காட்சி, செய்தி ஊடகங்கள் இதைதான் செய்து வருகின்றன..அப்சல் குரு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்..கைது செய்து காவல்துறை இவரின் படத்தை வெளியிட்ட உடனேயே, இவரை திவிரவாதியாக அடையாளமிட்டு செய்தி வெளியிட்ட இவைகள்..இதுவே உச்ச நீதிமன்ற இறுமாப்பு நீதிபதிகள், இப்படி ஒரு கொடூர மரண தண்டனை கொடுக்க வழிவகை செய்து உள்ளன ..இதற்கு என்ன செய்ய போகின்றன இந்த அமைப்புகள்.
 
தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக சில அரசியல் வியாதிகளின் சூழ்ச்சியில், ஒட்டுமுத்த இஸ்லாமிய மக்களை தனிமை படிதியுள்ளன இந்த அமைப்புகள்

No comments:

Post a Comment