Tuesday 15 November 2011

உண்மைகளை உரைக்காத கல்....

நண்பர்களே..
        நேற்றைய(14-11-11) தினமலர் பத்திரிக்கை  செய்தி நம்முடைய மன ஓட்டத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், நம்முடைய உணர்வுகள் இன்னும் செத்து போகவில்லையென்று...
     தான் வியாபாரம் செய்யும் ஒரு இடத்தில், அந்த இடத்தில் வாழ்பவர்களையே கேலி செய்து, தன்னுடைய வியாபாரத்தை நடத்தும் ஒரே பத்திரிக்கை இதுவாகதான் இருக்கும். அதையும் பார்த்தும், பாரா முகமாக செல்லும் சமூகமும் இது ஒன்றாகத்தான் இருக்கும்.. 
அந்த பெருமைக்குரியது நம் தமிழகம்தான்..
சட்டரீதியாக, சரியான சாட்சியங்களோடு நிருபிக்கப்பட்ட ஒரு கொலை குற்றவாளியை, சரியாக விசாரணை நடத்தப்படாமல், தண்டனை அளிக்கப்பட நிரபராதிகளோடு ஒப்பிட்டு செய்தி வெளியிட்டது, சட்டத்தை மீறிய ஒரு செயல்..
அடுத்தது, ஒரு காமுகனை, மனிதாபிமானம் இல்லாத ஒரு வன்புணர்ச்சி குற்றவாளியை, தமிழன் என்பதால் , தமிழ் இனத்தையே அவமானப்படுத்தும் நோக்கோடு செய்தி வெளியிட்டு, ஒரு இனத்தையே தவறாக சித்தரித்தது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது..
 
இவ்வாறு, இந்திய அரசியலமைப்புக்கும் , இந்திய சட்டத்திற்கும்
விரோதமாக செயல்படும் இந்த பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும் 
என இந்திய அரசை கேட்டு கொள்வோம்  

1 comment:

  1. இந்த கருத்ததுக்கு ஆதரவு அளிப்போம்.தினமல(ம்)ரை தூக்கி எறிவோம்.

    ReplyDelete